follow the truth

follow the truth

May, 11, 2025
Homeவிளையாட்டுஓய்வினை கோரும் விராட் கோலி

ஓய்வினை கோரும் விராட் கோலி

Published on

இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க அனுமதி கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

விராட் கோலி இந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது இவ்வருட உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இந்திய சிரேஷ்ட வீரர்கள் பலருக்கு ஓய்வளிக்க இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் விராட் கோலி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதன்படி இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஓய்வெடுக்க கோஹ்லி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் டிசம்பர் 26 முதல் மீண்டும் இந்திய அணியில் இணைவதாக கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று (10) மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஒத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றைய...