இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க அனுமதி கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
விராட் கோலி இந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது இவ்வருட உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இந்திய சிரேஷ்ட வீரர்கள் பலருக்கு ஓய்வளிக்க இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் விராட் கோலி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதன்படி இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஓய்வெடுக்க கோஹ்லி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் டிசம்பர் 26 முதல் மீண்டும் இந்திய அணியில் இணைவதாக கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.