களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானித்துள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
அதன்படி, மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கும். அதேவேளை அனைத்து மாணவர்களும் தத்தமது விடுதிகளை விட்டு நாளை காலை 8.00 மணிக்கு முன்னர் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.