follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP2மாற்றுத்திறனாளிகளின் பாவனை உபகரணங்கள் மீது விதிக்கப்படவுள்ள VAT வரியை நீக்குமாறு கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளின் பாவனை உபகரணங்கள் மீது விதிக்கப்படவுள்ள VAT வரியை நீக்குமாறு கோரிக்கை

Published on

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் VAT வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இந்த வரியையேனும் நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் தரவுகளின் பிரகாரம், இந்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மொத்த சனத்தொகையில் 8.7% ஆன 16 இலட்சம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், பல வருடங்களாக மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படாததால், இந்த எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் என்றபடியால், மேற்குறிப்பிட்ட சனத் தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட முறைமையினால் அதிகளவான நபர்கள் இதில் உள்வாங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2003 இல் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தேசிய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும்,2 016 ஆம் ஆண்டில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திற்கு உடன்பட்டுள்ளதாகவும், எனவே இது தொடர்பான சட்ட விதிகளை உருவாக்குவதற்கான சட்டப்பூர்வ கடமை இருந்தாலும், இதற்கு அரசாங்கம் கூடிய பங்களிப்பை வழங்குவதை கண்டுகொள்ள முடியாதுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இத்தகைய மாற்றுத்திறனாளிகள் இருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிப்பதால், இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்ப அலகுகள் அதிகளவில் இருப்பதால், அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...