எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 13ஆம் திகதி மின்சார கட்டண திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது எனவும், குறித்த சட்டமூலம் ஜனவரி மாதத்திலேயே பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.