follow the truth

follow the truth

February, 11, 2025
HomeTOP1பேரூந்து கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம்

பேரூந்து கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம்

Published on

VAT அதிகரிப்புடன், ஜனவரி மாதத்தில் பேரூந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

“ஜனவரி மாதம் முதல் ஒரு பேரூந்து இறக்குமதியின் போது சராசரியாக ஒரு கோடியே ஐம்பத்தேழு இலட்சம் செலவாகும். 18% VAT வரி அதிகரிப்பால் குறைந்தது இன்னும் 20 இலட்சமாவது அதிகரிக்கும்.

அந்த தொகைக்கு பேரூந்தை கொள்வனவு செய்து வந்து சாதாரண மக்களை ஏற்றிச் செல்ல முடியாமல் பேரூந்து உரிமையாளர்கள் திணறி வருகின்றனர். அதனுடன், உதிரி பாகங்களின் விலை, எண்ணெய் விலை, சேவைக் கட்டணங்கள் அனைத்தும் அதிகரிக்கின்றன. எரிபொருள் விலையேற்றம் மிகவும் பாரதூரமான விடயம்.

எரிபொருளின் மீது VAT மாற்றப்பட்டுள்ளது. அப்போது கண்டிப்பாக டீசல் விலை உயரும். மக்கள் ஆபத்தில் உள்ளனர். இதெல்லாம் அதிகரித்தால் மீண்டும் ஒருமுறை பேரூந்து கட்டணத்தை உயர்த்தும் நிலை உள்ளது.

விரைவில் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சக அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசிக்க எதிர்பார்த்துள்ளேன்..” என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகரிடமிருந்து அறிவிப்பு

பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை...

உலக அரச உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு இடையில் பல சந்திப்புகள்

2025ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர...

குருநாகல் விபத்து- 02 பேருந்துகளின் சேவைகள் இடைநிறுத்தம்

குருநாகல், தொரயாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்துகளின் சேவைகளை இடைநிறுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண...