ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 ஆவது மாநாட்டில் மஹிந்த ராஜபக்சவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிந்ததோடு, அதனை ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்தார்.
அதன் பிறகு, பேரவையில் இருந்த கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு பொது மாநாட்டில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.