follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபொருளாதார நெருக்கடி தீர்ந்து அடுத்த ஆண்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்

பொருளாதார நெருக்கடி தீர்ந்து அடுத்த ஆண்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்

Published on

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டு அடுத்த வருடம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்பது வருடங்களாக கைவிடப்பட்டு மரந்தகஹமுலவில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட அரிசி மொத்த விற்பனை நிலையத்தை இன்று (19) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் தலையீட்டின் பேரில், இந்தக் களஞ்சியசாலை வளாகம் புனரமைக்கப்பட்டது. மரந்தகஹமுல களஞ்சியசாலை வளாகம் மற்றும் மொத்த வர்த்தக நிலையத்தின் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க திறைசேரியில் இருந்து பணம் கேட்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த ஆண்டு அமைச்சரவை பத்திரத்தையும் சமர்ப்பித்திருந்தார்.

இங்கு கட்டுமானப் பணிகள் முழுவதையும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மெற்கொண்டுள்ளது. இந்தக் களஞ்சியசாலை வளாகத்தில் சுமார் 75,000 மெட்ரிக் தொன் அரிசியை சேமித்து வைக்கும் வசதிகள் உள்ளன.

ஒரு வருடம் முன்பு நாடு எப்படி இருந்தது என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது. அரசியலுக்கு முன் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதன் அடிப்படையில் நாங்கள் உதவுகிறோம். நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, சிலர் அதைத் திரும்பப் பெற முயற்சிப்பார்கள். அதை அனுமதிக்க முடியாது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை அதிகம். இது எங்களுக்குத் தெரியும். எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். எனவே, அடுத்த ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம் என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...