இந்த வருடத்தில் 16 வயதுக்குட்பட்ட 2000 சிறுமிகள் தாயாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸாரின் அறிக்கையின்படி கடந்த நவம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட 10 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.