follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1மாத்தறை கல்வி வலயத்திலுள்ள 22 பாடசாலைகளில் மின்துண்டிப்பு

மாத்தறை கல்வி வலயத்திலுள்ள 22 பாடசாலைகளில் மின்துண்டிப்பு

Published on

மாத்தறை கல்வி வலயத்திலுள்ள 22 பாடசாலைகளில் நேற்று (19) மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் 22 பாடசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைகளின் மின் கட்டணம் வலயக் கல்வி அலுவலகங்களினால் செலுத்தப்பட்டு வருகின்றதுடன், பல மாதங்களாக குறித்த பாடசாலைகளில் நிலுவையிலுள்ள மின் கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைகள் மின்சார கட்டணமாக 25 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு காரணமாக வருட இறுதியில் நடைபெறும் திருவிழாக்கள், கலாசார நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...