ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நத்தார் பண்டிகை முன்னிட்டு 1004 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
அதன்படி 989 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.