கண்டி போதனா வைத்தியசாலையில் கொவிட் மரணம் பதிவானதாக செய்திகள் வெளியாகின.
கம்பொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குறித்த நபர் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் இறப்புக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதாகவும் வைத்தியர் கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும், வைத்தியர்களின் கருத்திற்கமைய இது கொவிட் மரணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.