follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடு21 மெற்றிக் டன் விதை உருளைக்கிழங்குகளில் பக்டீரியா தாக்கம்

21 மெற்றிக் டன் விதை உருளைக்கிழங்குகளில் பக்டீரியா தாக்கம்

Published on

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகளில் ஏற்பட்ட பக்டீரியா தாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை, விவசாய அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று சென்று யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகள் தொடர்பில் ஆராய்ந்தது.

விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் உயரதிகாரிகள் குறித்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இதன்போது, உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெற்ற 21 மெற்றிக் டன் விதை உருளைக்கிழங்குகளில் பக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.

அதேநேரம் உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமையினால் அதில் 40 சதவீத உருளைக்கிழங்குகளில் முற்றிலுமாக பக்டீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்ப்பதற்கு, பக்டீரியா தாக்கம் ஏற்பட்ட விதை உருளைக்கிழங்குகளை உடனடியாக அழிப்பதற்கு அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விதை உருளைக்கிழங்குகள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...