follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுநிறுத்தப்பட்ட பல திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்

நிறுத்தப்பட்ட பல திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்

Published on

கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.

வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் நேற்று (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிமேஷ் ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடி விரைவில் அவற்றை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தலைவர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...