follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஒரே நாடு - ஒரே சட்டம் : மக்களை நாடும் ஜனாதிபதி செயலணி

ஒரே நாடு – ஒரே சட்டம் : மக்களை நாடும் ஜனாதிபதி செயலணி

Published on

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவை செயற்படுத்தும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி சட்டவரையினை தயார் செய்வதற்காக பொதுசன அபிப்பிராயத்தை கோர தீர்மானித்துள்ளது.

அதற்கமைய நிறுவனம், குழு அல்லது தனிநபர் தங்களின் அபிப்பிராயங்களை ocol.consultations@gmail.com என்ற உத்தியோகப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

அல்லது செயலாளர், ‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி’ செயலணி, தபால் பெட்டி இலக்கம் .504 கொழும்பு’ என்ற முகவரிக்கு இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க முடியும்.

‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ எண்ணக்கருவை செயற்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மாதம் 26ஆம் திகதி பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணியை நியமித்தார்.

ஜனாதிபதி செயலணியினர் ஒவ்வொரு மாதம் ஜனாதிபதிக்கு முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் முழுமையான இறுதி அறிக்கை 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் அல்லது அத்தினத்தன்று சமர்ப்பிக்கப்படவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...