follow the truth

follow the truth

August, 6, 2025
HomeTOP2கொழும்பில் 30 வீதமானோர் தட்டம்மை தடுப்பூசி பெற மறுப்பு

கொழும்பில் 30 வீதமானோர் தட்டம்மை தடுப்பூசி பெற மறுப்பு

Published on

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் தட்டம்மை நோயின் மேலதிக டோஸ் பெறாத எண்ணூறுக்கும் மேற்பட்டோர் இருப்பதாக பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தட்டம்மை ஒழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ள போதிலும், கடந்த வருடத்தின் கடந்த ஏழு மாதங்களில் மாத்திரம் 700க்கும் அதிகமான தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த சனிக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்டுள்ள 09 மாவட்டங்களில் 06 தொடக்கம் 09 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு மேலதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.

இதன்படி, கொழும்பு மாநகர சபை பகுதியில் தட்டம்மை கூடுதல் டோஸ் திட்டத்தில் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட 1,268 குழந்தைகளுக்கு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...