அரிசி தட்டுப்பாடு பெப்ரவரியில் முடிவுக்கு

340

நாட்டில் நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கான தட்டுப்பாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் எனவும் அந்த இரண்டு வகை அரிசிகளின் பற்றாக்குறையை ஈடுகட்ட அரிசியை இறக்குமதி செய்வது மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் ரத்னா அரிசி நிறுவனத்தின் தலைவர் தமித்ரபால லங்கேஸ்வரா தெரிவித்தார்.

இம்மாதம் 15ஆம் திகதி அறுவடை ஆரம்பமாகி, கீரி சம்பா அரிசி கிடைத்த பின்னர் அதிகளவு அரிசியை சந்தைக்கு வழங்க முடியும் எனவும் நெல் அறுவடை நெருங்கும் போது அரிசியை இறக்குமதி செய்வதன் மூலம், நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் மீண்டும் வீதியில் இறங்கலாம் என்றும் அவர் கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here