பதுளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணிக்க சிரமப்படும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகள் பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்க சிரமப்படும் பரீட்சை பரீட்சார்த்திகள் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.