கந்தகாடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐவரடங்கிய குழு

156

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் ஐவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதுடன், உரிய விசாரணை மற்றும் பரிந்துரை அடங்கிய அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்பிக்குமாறு சம்பந்தப்பட்ட விசாரணை குழுவுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்த ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை நீதியமைச்சர் நியமித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here