follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2எக்ஸ்பிரஸ் பேர்ல் - இழப்பீடு மீதான கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் – இழப்பீடு மீதான கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள்

Published on

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 29 ஆம் திகதி பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கப்பலை வைத்திருக்கும் நிறுவனத்திடம் இருந்து பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகையை 19.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களாக நீதிமன்றம் முன்னர் மட்டுப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் (எஸ்ஐசிசி) கப்பல் நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் வழக்கின் சாட்சியங்கள் விசாரிக்கப்படவுள்ளதுடன், துறைமுக அதிகாரி முதல் சாட்சியாக முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...