ஜனாதிபதி தேர்தலில் இருந்து தம்மிக்க பெரேரா விலக தீர்மானம்

589

ஜனாதிபதி தேர்தலில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடகங்களில் பிரசாரம் செய்வதை கருத்திற்கொண்டு, தம்மிக்க பெரேரா தனது தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடத் தயார் என வர்த்தகர் தம்மிக்க பெரேரா முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நிறுத்த எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here