follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1மைத்திரியின் மகளின் தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை களவு

மைத்திரியின் மகளின் தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை களவு

Published on

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிகா சிறிசேனவின் பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுர வீட்டிற்குள் புகுந்து தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை உட்பட சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம்(20) நண்பகல் 12 மணி முதல் மாலை 06 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. சதுரிகா சிறிசேனவின் கணவர் சுரஞ்சித் வெவெல்பனாவ தலங்கம பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அங்கு நடந்த விசாரணையில், அலுமாரியில் இருந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய், தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, எட்டு தங்க முலாம் பூசப்பட்ட சிங்கப்பூர் காசுகள், ஸ்மார்ட் வாட்ச், உலர் உணவு பொருட்கள், பாடசாலை புத்தக பை ஆகியவை திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

தலங்கம பொலிஸ் குற்றப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் லக்ஷிதா தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதுடன் இது போதைப்பொருளுக்கு அடிமையான நபர் அல்லது குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திருட்டு என சந்தேகிக்கப்படுகிறது.

திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் பெறுமதி இருபத்தி ஒன்பது இலட்சத்து அறுபத்து நான்காயிரம் ரூபா எனவும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...