follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Published on

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் கடந்த 26 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாரதிகள் விதிமுறைகளை கடைப்பிடிக்காததே அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மற்றும் மாற்றுப்பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளமையும் விபத்துகளுக்கு காரணமாக அமைவதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...