நாளை முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

784

76வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகையின் போது கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை(30) முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை இந்த போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், 3ம் திகதி மதியம் 2 மணி முதல் 4ம் திகதி வரை சுதந்திர தின விழா முடியும் வரையிலும் போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும்.

அதன்படி, காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான பகுதியும் செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலான பகுதியும் பல கட்டங்களின் கீழ் நாளை(30) முதல் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிவரை மூடப்படவுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here