follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1வடமாகாண கடற்றொழில் துறைக்கு 500 மில்லியன் ரூபா அரசு ஒதுக்கீடு

வடமாகாண கடற்றொழில் துறைக்கு 500 மில்லியன் ரூபா அரசு ஒதுக்கீடு

Published on

வட மாகாணத்தில் கடற்றொழில்துறை அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு இவ்வருடம் 80 மில்லியன் நிதி கிடைத்துள்ளது. அதில் பெரும்பகுதி நிதி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்கு கிடைத்த இந்நிதி போதுமானதல்ல. ஆனாலும், வடமாகாண சபை நிதியும் உள்ளது. அத்துடன் அமைச்சுக்களுக்கு ஊடாகவும் நிதிகள் ஒதுக்கப்படும்.

மேலதிகமாக நிதி வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

கடல் தொழில் அபிவிருத்திக்காக வட மாகாணத்திற்கு 500 மில்லியன் நிதியை அமைச்சு ஊடாக ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இந்த ஒதுக்கீடுகளை முறையாகவும், பயனுள்ளதாகவும் பயன்படுத்த வேண்டும்.

அதற்கு பயனாளிகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...