follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP1வடமாகாண கடற்றொழில் துறைக்கு 500 மில்லியன் ரூபா அரசு ஒதுக்கீடு

வடமாகாண கடற்றொழில் துறைக்கு 500 மில்லியன் ரூபா அரசு ஒதுக்கீடு

Published on

வட மாகாணத்தில் கடற்றொழில்துறை அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு இவ்வருடம் 80 மில்லியன் நிதி கிடைத்துள்ளது. அதில் பெரும்பகுதி நிதி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்கு கிடைத்த இந்நிதி போதுமானதல்ல. ஆனாலும், வடமாகாண சபை நிதியும் உள்ளது. அத்துடன் அமைச்சுக்களுக்கு ஊடாகவும் நிதிகள் ஒதுக்கப்படும்.

மேலதிகமாக நிதி வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

கடல் தொழில் அபிவிருத்திக்காக வட மாகாணத்திற்கு 500 மில்லியன் நிதியை அமைச்சு ஊடாக ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இந்த ஒதுக்கீடுகளை முறையாகவும், பயனுள்ளதாகவும் பயன்படுத்த வேண்டும்.

அதற்கு பயனாளிகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...