follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP2இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்

Published on

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கட்டணம் தொடர்பில் கல்வி அதிகாரிகள் நம்பகமான தீர்மானத்தை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இல்லை என்றால் விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கைகள் தடைபடலாம் என அதன் செயலாளர் திரு.ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்படாத காரணத்தினால் சில ஆசிரியர்கள் நேற்றைய தினம் மதிப்பீட்டுப் பணியிலிருந்து விலகியதாக அவர் தெரிவித்தார்.

கடந்த முறை வழங்கப்பட்ட நாளாந்த கொடுப்பனவான 2000 ரூபாவை இம்முறையும் வழங்க அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதி பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் முதற்கட்டப் பணிகள் நேற்று ஆரம்பமானதுடன், எதிர்வரும் 13ஆம் திகதி வரை இப்பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...