follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP1இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அனுர

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அனுர

Published on

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை இந்தியாவின் புதுடில்லியில் சந்தித்துள்ளார்.

நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிய நல்ல விவாதம் இடம்பெற்றதாவும் மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தமது உத்தியோகபூர்வ x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்டை நாடு முதல் மற்றும் SAGAR கொள்கைகளுடன் இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இருக்கும் என்றும் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை இரண்டாக குறைப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள்...

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து...

அடுத்த இரு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளையும்(24) நாளை மறுதினமும்(25) வருகை தருவதை தவிர்க்குமாறு...