follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2பொது போக்குவரத்தில் துன்புறுத்தல் - இன்று முதல் விசேட வேலைத்திட்டம்

பொது போக்குவரத்தில் துன்புறுத்தல் – இன்று முதல் விசேட வேலைத்திட்டம்

Published on

பொது போக்குவரத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை கையாள்வதற்காக இலங்கை பொலிஸார் இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் காரணமாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் காலை 08.00 – 10.00 மற்றும் மாலை 05.00 – 07.00 மணி வரை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரங்களில் பொதுப் போக்குவரத்தில் சிவில் உடையில் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த காலக்கட்டத்தில் பேருந்துகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் சிவில் உடையில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் உடையில் இருக்கும் அதிகாரிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்காக சீருடையில் பொலிஸ் அதிகாரிகளும் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...