follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP2பொது போக்குவரத்தில் துன்புறுத்தல் - இன்று முதல் விசேட வேலைத்திட்டம்

பொது போக்குவரத்தில் துன்புறுத்தல் – இன்று முதல் விசேட வேலைத்திட்டம்

Published on

பொது போக்குவரத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை கையாள்வதற்காக இலங்கை பொலிஸார் இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் காரணமாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் காலை 08.00 – 10.00 மற்றும் மாலை 05.00 – 07.00 மணி வரை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரங்களில் பொதுப் போக்குவரத்தில் சிவில் உடையில் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த காலக்கட்டத்தில் பேருந்துகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் சிவில் உடையில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் உடையில் இருக்கும் அதிகாரிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்காக சீருடையில் பொலிஸ் அதிகாரிகளும் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...