அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் 16 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை மாலை 5மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.