follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நுவரெலியாவில் கடும் பனி மூட்டம் - சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியாவில் கடும் பனி மூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை

Published on

நுவரெலியாவில் பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளதனால் பிரதான வீதிகளில் செலுத்தப்படும் வானங்களை ஒலி, ஒளியுடன் செலுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை நுவரெலியா மற்றும் கந்தப்பளை பொலிஸார் இன்று (16) விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக மாலை வேளையில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று (16) மாலை மூன்று மணிக்கு பின்னரான காலப்பகுதியில் மழையுடன் பனி புகை மூட்டமும் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் நுவரெலியா கண்டி பிரதான வீதியின் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளதால் அவ் வீதியில் மிக அவமனத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா பொலிஸார் வாகன சாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...