சுகாதார தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவுக்கும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்குமிடையில் இன்று(19) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்தக் குழுவை நியமித்தார்.
இதன்படி, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நாளை(20) கூடி இது தொடர்பில் ஆராயவுள்ளனர்.