follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2Black List தொடர்பான தரவுத்தளம் எமது நாட்டில் இல்லை

Black List தொடர்பான தரவுத்தளம் எமது நாட்டில் இல்லை

Published on

டெண்டர் முறை மற்றும் கொள்முதல் முறைக்கு மாறாக ஊழல் மற்றும் மோசடியான, இலஞ்சம் வழங்கி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. உலகின் பிற நாடுகளில் உள்ள இதுபோன்ற நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை இனங்கண்டு நாட்டு மக்களுக்கு பொதுவான வழிமுறைகள் மூலம் தெரியப்படுத்துகின்றனர். நேபாளத்தில் 629 நிறுவனங்களும் பங்களாதேஷில் 510 நிறுவனங்களும் இவ்வாறு இனம்காணப்பட்டு கருப்பு பட்டியல் படுத்தப்பட்டு வெளிக்கொணர்ப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டெண்டர் மோசடிகள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட, இந்நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்காத தெற்காசியாவின் ஒரே நாடு இலங்கை மட்டுமே. இவ்வாறான கருப்புப் பட்டியல்கள் தொடர்பான தரவுத்தளம் எமது நாட்டில் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த முறை மாற்றப்படும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் திருட்டு, மோசடி காரணமாக கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் ஒவ்வொரு நிறுனங்கள் தொடர்பான தகவல்களும் பொதுத் தரவுத்தளம் மூலம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இத்தகைய கருப்புப்பட்டியலில் உள்ள நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டால், வரி செலுத்தும் மக்களுக்கு அது குறித்து அறிய உரிமை உண்டு. இந்த உரிமையை மக்களுக்கு பெற்றுத் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 105 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கெபிதிகொல்லேவ, முஸ்லிம் அட்டவீரவெவ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்றைய (19) தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...