follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1ஹரீனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்

ஹரீனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்

Published on

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியிருப்பது தேசத்துரோகச் செயலாகும். இது மரண தண்டனைக்கு உரிய குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் இறைமை மற்றும் சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தில் தேசத்துரோகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை மரண தண்டனை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு கூர்ந்தார்.

“தேசத்துரோகம் என்பது ஒரு அரசனுக்குத் துரோகம் செய்வதல்ல. நமது தண்டனைச் சட்டத்தில் தேசத் துரோகத்திற்கான தண்டனை மரணம். எளிமையாகச் சொன்னால், அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைச் செய்துள்ளார்.

இந்த அறிக்கையானது அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்ட சத்தியப் பிரமாணத்தை மீறும் செயலாகும். இதன்படி அமைச்சர் ஹரீன் அமைச்சர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் கூட்டத்தில், அமைச்சரவை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, “இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி” என அவரது உரையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால்...

விசேட சுற்றிவளைப்பில் 1,241 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,241 நபர்கள் கைது...