follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2பாண் எடை குறைத்து விற்பனை செய்த 450 பேக்கரிகள் மீது வழக்கு

பாண் எடை குறைத்து விற்பனை செய்த 450 பேக்கரிகள் மீது வழக்கு

Published on

ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி விதிமுறைகளின்படி விலையை குறிப்பிடாத 453 பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு வழக்கு தொடர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என நாடு முழுவதும் கடந்த 5 ஆம் திகதி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 453 பேக்கரிகள் மற்றும் கடைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்வார்கள் எனவும், நுகர்வோருக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின், 1977 என்ற நுகர்வோர் அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் எனவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...