இணைய வழி ஊடாக இலத்திரனியல் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் வலையமைப்பை ஜா-எல கலால் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
30 இலட்சம் ரூபா பெறுமதியான ஈ -சிகரெட் கையிருப்பு இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு 10 கோடி ரூபா வரி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஜா-எல கலால் அத்தியட்சகர் பிரமேஸ் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இந்த ஈ – சிகரெட்டுக்களுக்கு இளைஞர் சமூகம் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் அடிமையாகி வருவதாகவும் இது ஆபத்தான நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5