சஜித்துடன் இணைந்தார் மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய

265

முன்னாள் இராணுவ தளபதியும், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார்.

இலங்கை இராணுவத்தின் 54 ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே( WWV RWP VSV USP ndc psc), இன்று (23) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து,ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை தெரிவித்து இணைந்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இவர் ‘ஊழல் எதிர்ப்பு கொள்கை மற்றும் அமுலாக்கல் பிரிவின் பிரதானியாகவும்’எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினது ஊழல் எதிர்ப்புப் பயணத்தின் ஆலோசகராகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் இன்றைய தினம் நியமிக்கப்பட்டார்.

 

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here