follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல்

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல்

Published on

மியன்மாரின், மியாவாட் பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பது தொடர்பில், வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர், மியன்மாருக்கான இலங்கைத் தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையர்களை மீட்பதற்காக மியன்மார் அரசாங்கம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மனித கடத்தலில் சிக்கியவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அவர்களது உறவினர்களை தவறாக வழிநடத்தி பணம் வசூலிக்கும் மோசடியும் இடம்பெற்று வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சகம் அறிவுறுத்துகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...