follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2சஜித் ஜனாதிபதியாகும் அளவுக்கு முற்றவில்லை - அவர் இன்னும் பிஞ்சு

சஜித் ஜனாதிபதியாகும் அளவுக்கு முற்றவில்லை – அவர் இன்னும் பிஞ்சு

Published on

இந்த நாட்டை பொறுப்பேற்றுக்கொள்ளும் அளவுக்கு சஜித் பிரேமதாச முற்றவில்லை என்றும் அது தொடர்பான அனுபவம் அவருக்கு குறைவு என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த செவ்வியில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

எனக்கு ஜெ.வீ பீ போன்ற ஒரு கட்சி எதிர்கட்சியாக வருவது பிடிக்கும். ஏன் என்றால் நாட்டில் ஊழல் நடக்காது. அவர்கள் கேள்வி கேட்பார்கள். ஆனால் தற்போதுள்ள சவால்களை வெற்றிகொண்டு ஜனாதிபதியாகும் அளவுக்கு அவர்கள் இன்னும் அனுபவம் பெறவில்லை.

அத்தோடு சஜித் பிரேமதாசவும் இன்னும் முற்றவில்லை. அதுதான் சஜித் பிரேமதாசவிடம் இருக்கின்ற பிரச்சினை. அவர் ஒரு நாளும் இரண்டாவதாக வந்ததில்லை. ஒரு நாட்டை வழிநடத்தும் முறை அவருக்கு தெரியாது.
ஊழல் ஒழித்தல், கள்வர்களை பிடித்தல் மூலம் மட்டும் இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என்று ஜெ.வீ.பீ நினைத்தால் அது தவறு. அதனை விடவும் ஆழமான எத்தனையோ விடயங்கள் உள்ளன என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...