பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்துக்கு வழங்கிய உறுதிமொழி

297

ஒருவரைக் கைது செய்யும்போது, அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம், முறைப்பாடு செய்த நபரின் விபரங்கள், கைதானவர்களுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு விநியோகிக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று(27) உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.

பேஸ்புக் பதிவு ஒன்றுக்காக கைது செய்யப்பட்ட நபரின் அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு உறுதியளித்தார்.

வாக்குமூலம் வழங்குவதற்கு வருகைதருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தம்மை தொலைபேசியில் அழைத்ததாகவும், அதற்கான காரணத்தை அவர்கள் குறிப்பிட மறுத்தமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here