2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மூன்று ஆண்டு காலப்பகுதிக்கு தேயிலை, இறப்பர் ஆகியவற்றுக்கான தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று(28) இ.தொ.கா பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைப்பெற்றது.
தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும், சம்பள நிர்ணய சபையில் கோரிக்கைகளை எவ்வாறு முன்வைக்கப்படல் வேண்டும் என்பதையும் இச்சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.