வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் நாளைய தினமும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, உடலில் ஏற்படும் விளைவுகளை முடிந்தவரை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (29) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.