இன்று தெற்கில் துக்க தினம்

89

தென் மாகாணத்திற்கு இன்று (01) துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் கல்விக்காக பெரும் சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல் காலமானதே இதற்குக் காரணம்.

மேலும், தென் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தேசியக் கொடியும் இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என தென் மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் ருஹுனு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன.

சடலம் தற்போது ருஹுனு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here