ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் – விண்ணப்பம் கோரல்

793

2024-2025 ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

முதலாம் தரத்தில் இருந்து 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் பொருளாதார நெருக்கடியுள்ள ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமான www.facebook.com/president.fund மூலம் விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவுறுத்தல்களை மூன்று மொழிகளிலும் பெற முடியும்.

மேலும் சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.03.2024ஆம் திகதிக்கு முன் மாணவர்கள் தாம் கற்கும் பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here