follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2மத்ரஸா மாணவன் உயிரிழப்பு - சந்தேகநபர்களுக்கு பிணை

மத்ரஸா மாணவன் உயிரிழப்பு – சந்தேகநபர்களுக்கு பிணை

Published on

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் உயிரிழந்தமை தொடர்பான சிசிரீவி காணொளிகள் உள்ளிட்ட முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களும், கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளதுடன், மாத இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் சாய்ந்தமருதுபொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்பதுடன், வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்தின் மற்றுமொரு சந்தேகநபரான மௌலவி எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...