follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2மத்ரஸா மாணவன் உயிரிழப்பு - சந்தேகநபர்களுக்கு பிணை

மத்ரஸா மாணவன் உயிரிழப்பு – சந்தேகநபர்களுக்கு பிணை

Published on

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் உயிரிழந்தமை தொடர்பான சிசிரீவி காணொளிகள் உள்ளிட்ட முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களும், கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளதுடன், மாத இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் சாய்ந்தமருதுபொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்பதுடன், வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்தின் மற்றுமொரு சந்தேகநபரான மௌலவி எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...