மத்ரஸா மாணவன் உயிரிழப்பு – சந்தேகநபர்களுக்கு பிணை

1421

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் உயிரிழந்தமை தொடர்பான சிசிரீவி காணொளிகள் உள்ளிட்ட முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களும், கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளதுடன், மாத இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் சாய்ந்தமருதுபொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்பதுடன், வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்தின் மற்றுமொரு சந்தேகநபரான மௌலவி எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here