CIDயிலிருந்து வெளியேறினார் மைத்திரி

330

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்தரை மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பிலேயே வாக்குமூலம் வழங்கியதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here