பேருவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கழிவுகளை அகற்றும் முறையினால் பாரிய குப்பை மேடு உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த குப்பை மேட்டினால் மீத்தொட்டையில் நடந்ததைப் போன்று உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் எனவும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் கொண்ட மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே இந்தக் கழிவுகள் கொட்டப்படுவதாகத் தெரிவித்த அவர், பேருவளை, களுத்துறை பிரதேச செயலகப் பிரிவுகளின் சுகாதாரத் துறையின் பொறுப்பு மாகாண சபைக்கு இல்லை, நேரடியாக மத்திய அரசாங்கத்திற்கே உள்ளதாக தெரிவித்தார்.
பேருவளை குப்பை மேட்டை அகற்றி, கழிவுகளை அகற்றுவதற்கு நிலையான தீர்வை வழங்க சுகாதார, சுற்றாடல், உள்ளூராட்சி அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் அழைக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.