follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபேருவளையில் பாரிய குப்பை மேடு - உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம்

பேருவளையில் பாரிய குப்பை மேடு – உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம்

Published on

பேருவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கழிவுகளை அகற்றும் முறையினால் பாரிய குப்பை மேடு உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த குப்பை மேட்டினால் மீத்தொட்டையில் நடந்ததைப் போன்று உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் எனவும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் கொண்ட மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே இந்தக் கழிவுகள் கொட்டப்படுவதாகத் தெரிவித்த அவர், பேருவளை, களுத்துறை பிரதேச செயலகப் பிரிவுகளின் சுகாதாரத் துறையின் பொறுப்பு மாகாண சபைக்கு இல்லை, நேரடியாக மத்திய அரசாங்கத்திற்கே உள்ளதாக தெரிவித்தார்.

பேருவளை குப்பை மேட்டை அகற்றி, கழிவுகளை அகற்றுவதற்கு நிலையான தீர்வை வழங்க சுகாதார, சுற்றாடல், உள்ளூராட்சி அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் அழைக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...