follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டும்

அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டும்

Published on

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும் அதற்கு அவசியமாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

அத்துடன், அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அரசியல்வாதிகள் விளையாட்டுக் கழகங்களில் உயர் பதவிகளை வகிப்பதை தடுக்க முடியுமானால் சிறந்தது என்றும் கூறினார்.

கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் நேற்று (28) நடைபெற்ற சிங்கள விளையாட்டுக் கழகத்தின் (SSC)125ஆவது ஆண்டு பூர்த்தி விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

விளையாட்டுக் கழகங்களில் அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் வழங்காமல் இருப்பது அனைவருக்கும் நல்லதாகும் என நம்புகிறேன். அதேபோல் அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக வைத்திருப்பது காலோசிதமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதனால் நாம் விளையாட்டிலிருந்து விலகி இருக்கிறோம் என்று கூறவில்லை. உங்களின் தேவைகள் குறித்து நாம் கவனம் செலுத்துவோம். நமது தலைவர்களின் சம்பிரதாயங்களை பேண வேண்டியது கடமையாகும்.

அதேபோல், இலங்கை கிரிக்கெட்டை பாதுகாப்பதோடு, கிரிக்கெட்டில் இலங்கை முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...