follow the truth

follow the truth

May, 22, 2024
HomeTOP2பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள CCTV கமராக்கள் 6 வருடங்களாகக் கிடப்பில்

பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள CCTV கமராக்கள் 6 வருடங்களாகக் கிடப்பில்

Published on

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் உள்ளக வளாகத்தில் பொருத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட CCTV கமரா கருவிகள் 6 வருடங்களாக பொறுத்தப்படாமல் களஞ்சியத்தில் கிடப்பில் உள்ளதால் அவற்றைப் பொருத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அறிவித்தார்.

2017ஆம் ஆண்டில் 2.1 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இந்தக் கமராக்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இல்லை எனவும் அதில் ஒரு பகுதி மாத்திரமே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. அது தொடர்பில் தலையிட்ட அதிகாரிகளும் தற்பொழுது இடமாற்றம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்தது.

இவ்வாறான நிறுவனங்களுக்கு கமரா கருவிகளைப் பொருத்துவதற்கு சிலர் விரும்புவதில்லை எனச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமித்து CCTV கமரா அமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மே 15 க்கு முன்னர் அதன் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறும் அறிவுறுத்தினார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கூடியபோது இந்த விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...