சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக அரசாங்கம் விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தில் வழக்கமான அட்டவணைக்கு மேலதிகமாக 700 பேருந்து பயணங்கள் மற்றும் 12 மேலதிக ரயில் பயணங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால் இன்று காலையிலும் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையில், போதியளவு நெடுஞ்சாலைப் பேருந்துகள் இயங்கிய போதிலும், இன்று காலை மகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் ஏராளமான மக்கள் காணப்பட்டனர்.
கிராமத்திற்கு செல்வதற்காக இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.