follow the truth

follow the truth

May, 22, 2024
HomeTOP2கோழி இறைச்சி - முட்டை விலை மீண்டும் உயர்ந்தது

கோழி இறைச்சி – முட்டை விலை மீண்டும் உயர்ந்தது

Published on

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும் அவ்வாறான நிலைமை சந்தையில் காணப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையை வர்த்தகர்கள் தன்னிச்சையாக உயர்த்தி வருவதாகவும் சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் குற்றஞ் சுமத்துகின்றனர்.

முன்னதாக ஒரு கிலோகிராம் கோழியிறைச்சி 1,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தையடுத்து முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...